• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பழங்குடியின மாணவி சங்கவி நீட் தேர்வில் தேர்ச்சி !

November 3, 2021 தண்டோரா குழு

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் குடிசை வீட்டில் படித்து கோவை மாணவி முதன்முதலாக மருத்துவகல்லூரி செல்கின்றார்.

கோவை மாவட்டம் வாளையார் அருகே நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடி மாணவி சங்கவி. 2018 ம் ஆண்டு 12 ம் வகுப்பை முடித்த அவர் மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வெளியான தேர்வு முடிவுகளில் பழங்குடி மாணவி சங்கவி 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மருத்துவகல்லூரிக்கு செல்லும் முதல் மலசர் பழங்குடி மாணவி சங்கவி. அடிப்படை வசதிகள் இல்லாத அந்த பழங்குடி கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவியான சங்கவி, உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்த நிலையில் , ஊடகங்களில் செய்தியாக வந்த பின்னர் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைத்தது.

மருத்துவகல்வி படிக்க அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மாணவி சங்கவி கேட்டுக்கொண்டுள்ளார். மாணவியின் தந்தை உயிரிழந்து விட்ட நிலையில் , கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவி சங்கவி படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க