• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

March 5, 2020

கோவை அடுத்த சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணபதி பகுதியில் பள்ளிவாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னணி பொறுப்பாளர் ஆனந்தை நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய தையடுத்து கோவை அரசு மருத்துவமனை முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கோவை கணபதி ரூட்ஸ் நிறுவனம் எதிரில் உள்ள வேதம்பாள் நகர் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆனால், அது வெடிக்காததால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க