• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர்

January 5, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வி.கே.புதூர் அருகே ராமனுஜநகரிலுள்ள ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து குளத்துப்பாளையம், கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க