• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை

April 24, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதிகளில் இடி,மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

கோவை மாவட்டத்தில் இம்மாதத்தில் இருமுறை இடி, மின்னலுடன் கனமழை பரவலாக பெய்த நிலையில், மூன்றாம் முறையாக மாநகர பகுதிகளில் அதேபோல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கோவை ராமாநாதபுரம், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், போத்தனூர், ஆவாரம்பாளையம், பாப்பநாயகன்பாளையம், அண்ணா சிலை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.

கடந்த வாரத்திலும், இந்த வார தொடக்கத்திலும் மழை பெய்த நிலையில், மீண்டும் இன்று மழை பெய்தது. முன்னதாக வெப்பம் வாட்டி வதைத்தால் பணிக்கு செல்வோர், தொழிலாளர்கள், தொழிமுனைவோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், கோடை மழை அந்த வெப்பத்தை தனித்து குளுமையான சூழலை ஓரளவுக்கு தந்ததை அடுத்து, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க