• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை

April 24, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதிகளில் இடி,மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

கோவை மாவட்டத்தில் இம்மாதத்தில் இருமுறை இடி, மின்னலுடன் கனமழை பரவலாக பெய்த நிலையில், மூன்றாம் முறையாக மாநகர பகுதிகளில் அதேபோல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கோவை ராமாநாதபுரம், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், போத்தனூர், ஆவாரம்பாளையம், பாப்பநாயகன்பாளையம், அண்ணா சிலை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.

கடந்த வாரத்திலும், இந்த வார தொடக்கத்திலும் மழை பெய்த நிலையில், மீண்டும் இன்று மழை பெய்தது. முன்னதாக வெப்பம் வாட்டி வதைத்தால் பணிக்கு செல்வோர், தொழிலாளர்கள், தொழிமுனைவோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், கோடை மழை அந்த வெப்பத்தை தனித்து குளுமையான சூழலை ஓரளவுக்கு தந்ததை அடுத்து, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க