• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பட்டபகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில நபர் கைது

June 11, 2022 தண்டோரா குழு

பட்டபகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்நிலையில் இன்று மதிய அக்கோவில் பகுதியில் வந்த வட மாநில நபர் ஒருவர் கோவிலை நோட்டமிட்டு கொண்டிந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்றதாக தெரிகிறது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் எல்லை ரோந்து பணி காவலர்கள் அந்த வட மாநில நபரிடம் விசாரணை நடத்தினர். யார் எந்த ஊர் என்று கேள்வி எழுப்பிய நிலையில் பெயர் கூட தெரிவிக்காமல் வடமாநில மொழியில் திரும்ப திரும்ப ஒரே வார்த்தை சொல்லி கொண்டிருந்ததால் காவல்துறையினர் அந்த நபரை விசாரணை செய்ய அழைத்து சென்றனர்.

பட்டபகலில் கோவிலின் பூட்டை உடைக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க