• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நூற்பாலையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

December 5, 2021 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி நூற்பாலையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலாளர் ஒருவர் பணிபுரியும் பெண் ஒருவரை தாக்கியதில் அந்தப் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில் கோவை மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் நடைபெற்றது தெரியவந்தது.
அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் வேலைக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விடுதியின் காப்பாளர் அந்தப் பெண்ணை தாக்கி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெரும் கண்டனங்கள் எழுந்த வந்த நிலையில் சரவணம்பட்டி காவல் துறையினர் அந்த விடுதியின் காப்பாளர் லதா மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க