• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நூதன முறையில் பொது மக்களுக்கு உதவி வரும் பா.ஜ.க பெண் நிர்வாகி

April 3, 2020 தண்டோரா குழு

கோவையில் வீடு தோறும் சென்று மளிகை சாமான்கள் வாங்க கூப்பன் வழங்கி நூதன முறையில் பொது மக்களுக்கு உதவி வரும் பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் முக்கிய தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோவை இராமநாதபுரம் 68 வது வார்டு பகுதியில் பா.ஜ.க.தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் கவிதாராஜன் நூதன முறையில் பொது மக்களுக்கு உதவி வருகிறார்.அவர் 200 ரூபாய்க்கான கூப்பனை வீதி தோறும் சென்று வழங்கி,அந்தந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளின் பெயர்களை கூப்பனில் குறிப்பிட்டுள்ளார்.இது போன்று இராமநாதபுரம், பஜனை கோவில் வீதி,சூரியன் நகர் என சுமார் 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இது வரை 700 கூப்பன்கள் வரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பேசுகையில்,

இது போன்று நேரங்களில் பல்வேறு உதவிகள் கிடைத்தாலும்,இது போன்று கூப்பனகள் கிடைத்ததால் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் தேவையான பொருட்களை வாங்க முடிகிறது என தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பல்வேறு உதவிகளை தன்னார்வலர்கள் பலர் செய்து வரும் வேளையில் இது போன்று நூதனமாக இவர் உதவி வருவதை பொது மக்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க