December 19, 2019
கோவை டவுன்ஹால் பகுதியில் தங்க நகை வியாபாரி சின்னய்யா என்பவரிடம் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் 650 கிராம் தங்கம் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா என்பவர் கோவையில் 650 கிராம் தங்கத்தை வாங்கிக் கொண்டு இன்று பொள்ளாச்சி திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உக்கடம் அருகே போலீசார் என கூறி சின்னையாவின் உடமைகளை இருவர் சோதனையிட்டு விட்டு கடந்து சென்றுள்ளனர். மீண்டும் சின்னய்யா தனது பையை பார்த்த போது அதில் இருந்த 650 கிராம் தங்க கட்டிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைவியாபாரி சின்னையா கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.