• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நுகர்வோர் மன்ற பொறுப்பில் இருப்பதாக கூறி மிரட்டி பணம் வசூல் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி – ஆட்சியரிடம் மனு

July 30, 2018 தண்டோரா குழு

நுகர்வோர் மன்ற பொறுப்பில் இருப்பதாக கூறி பொதுமக்கள் மற்றும் விசைத்தறி , கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்யும் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகராயம் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் நுகர்வோர் அமைப்பில் இருப்பதாக கூறி விசைத்தறி, கைத்தறி, மளிகை கடை வியாபாரிகளின் தகவல்களை தெரிந்துகொண்டு அரசு அதிகாரிகளிடம் சொல்லி விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மேலும் அரசு சலுகைகள் , குடும்ப அட்டை , இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் வாங்கிக் கொடுக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறி அதிக தொகை வாங்கி ஏமாற்றி வருவதாகவும், தேவாங்க குல மக்கள் கட்டிய கோவில் மற்றும் மண்டபத்தில் ஊழல் நடப்பதாக கூறி பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், மீறி கேட்கும் நபர்களை தனது மனைவி மற்றும் மகளை மானபங்கப்படுத்துவதாக கூறி பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வருவதாக தெரிவித்தனர். கடந்த இருபது வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் அனைத்து மக்களையும் மிரட்டி பணம் பறித்து வரும் சிவக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க