June 9, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நிபா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று(ஜூன் 9) நடைபெற்றது.
கோவையில் உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமீபத்திய வைரஸ்க்கு எதிரான மருந்தியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பின் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,நிபா வைரஸ் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கருத்தரங்கில் விவரிக்கப்பட்டது.நிபா வைரஸ் நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்தனர்.இந்த கருத்தரங்கத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு நிபா வைரஸ் நோய் குறித்து அறிந்து கொண்டனர்.