• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற ” ரன் ஃபார் மாம் ” மாரத்தான் போட்டி !

May 15, 2022 தண்டோரா குழு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேட் அமைப்பு ஆகியோர் சார்பாக கோவையில் நடைபெற்ற ” ரன் ஃபார் மாம் ” மாரத்தான் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேட் ஆர்கனைசேஷன் என்ற உலகலாவிய அமைப்பின் சார்பாக ஜெயின் சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு சமூக நலப் பணிகளை செய்துவருகின்றனர். சுமார் 14300 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பு 11 நாடுகளில் 65 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இதன் கோவை கிளையின் மகளிர் பிரிவு மற்றும் கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை ஆகியோர் சார்பாக ரன் ஃபார் மாம் மாரத்தான் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

தாய்மையைக் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, இயக்குனர் மதுரா பழனிசாமி கோவை மகளிர் அணி பிரிவு தலைவர் பூணம் பாஃப்னா ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக, கோவை டெரியர்ஸ் கமாண்டிங் அதிகாரி கர்னல் சிங் தன்வர் மற்றும் கோவை மாநகர் போக்குவரத்து துணை ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

3,5,10 கிலோ மீட்டர் தூரம் என நடைபெற்ற இதில், சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டப் பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.மருத்துவமனை வளாகத்தில் துவங்கி ஓடிய வீரர்கள்,காளப்பட்டி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தனர்.வறுமையான சூழலில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் தினசரி ஒரு கிளாஸ் பாலை வழங்கி வரும் பீப்புள் ஃபார் பீப்புள் அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க