• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மினி மாரத்தான்

January 5, 2019 தண்டோரா குழு

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு பிரிவுகளில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நான்காவது ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இதில் கண் பார்வையற்றோர், காது கேளாதோர்,மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள்,பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளாக நடைபெற்றது.

கோவை வேளாண்மை பல்கலைகழக மைதானத்தில் துவங்கிய இப்போட்டியை கோவை வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் குமார் மற்றும் மேற்கு ரோட்டரி தலைவர் சசிகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீல் சேரில் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையளார்களை வியப்பில் ஆழ்த்தியது.

இறுதியில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க