• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டி

May 30, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டியில் மாற்றுதிறனாளிகள் விளையாடி அசத்தினர்.

விளையாட்டு துறையில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் தென்னிந்திய அளவிலான வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து பெண்கள் பிரிவில் 3அணிகள், ஆண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 9அணிகள் பங்கேற்றனர்.விறு விருப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் தெலுங்கானா ,தமிழ்நாடு அணியும் மோதி கொண்டதில் தமிழகம் முதலிடத்தையும், தெலுங்கானா இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

இதே போல பெண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடக அணி மோதியதில் கர்நாடக முதல் இடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு கோப்பைகள் ,சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

தொடர்ந்து பேசிய நடிகர் சதீஷ் மாற்று திறனாளிகள் சிறு வயதில் இருந்து பல்வேறு காலகட்டங்களை கடந்து இம்மாதிரியான விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் தான் நிஜத்தில் ஹீரோ எனவும் தான் நடிக்கும் படங்களில் மாற்று திறனாளியாக நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை கற்று கொண்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒளிந்திருக்கும் மாற்று திறனாளி வீராங்கனைகள் வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டிகள் நடைபெற்றதாகவும்,மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க