• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநாடு,மாநில தலைவர் நாராயணன் பங்கேற்பு

January 7, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில தலைவர் நாராயணன் கலந்து கொண்டார்.தரமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாத்தல், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், சங்கத்தின் சேவைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துதல்,மகளிர் நலன் மற்றும் அவர்களை வலிமைப்படுத்துதல்,வணிகம் மற்றும் தொழில் முனைவோர் பலம் பேணுதல், பிறந்தநாள் சமூக அனைத்து உட்பிரிகளையும் சங்கத்தில் இணை செய்தல், உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் ஆலோசனை, பிரம்மா சமுத்திரக்கு அனைவருக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் செய்தியாளரிடம் பேசிய மாநில தலைவர் நாராயணன்,

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ததை ,தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்,அறநிலையத்துறை கோவிலிகளில் தன்னாட்சி வாரியம் அமைக்கப்பட்ட வேண்டும் எனவும் கேரளா அரசு போல நலிந்தோர்க்கு நலவரியத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இதில் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர், டாக்டர் அஸ்வின் மோகன், பேராசிரியர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மற்றும் முக்கிய பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர்.

மேலும் படிக்க