• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆதரவு

February 28, 2020

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் 9 வது நாளாக NRC CAA,NPR, சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் , இந்த போராட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் “கோவையின் ஷாகின் பாஃக்” என்ற பெயரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த காத்திருப்பு போராட்டம் 9 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் ,
இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட கிறிஸ்த்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

9 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், எதிர்ப்புப் பதாகைகளை கையில் ஏந்தியும் இரவு நேரத்திலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க