கோவை மாவட்டத்தில் நேற்று 1 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தமிழக மாநில தேர்தல் ஆணையத்தால் நேர்தல் நடத்தப்பட்டது. இதில் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 1 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு நேர்வாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய பாதுகாப்பு உபகரணங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 வாக்குச்சாவடிகளில் 74.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைநியாக நல்ல முறையில் நடைபெற்றது. பதிவான வாக்குகளின் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்