• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நகை அடகு நிறுவனத்தில் கூடுதலாக கணக்கு காட்டி 46.72 லட்சம் ரூபாய் மோசடி

January 23, 2020

கோவையில் நகை அடகு நிறுவனத்தில் கூடுதலாக கணக்கு காட்டி 46.72 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இயங்கி வரும் பூரம் பின்சர்வ் நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் கணக்கு சரி பார்த்தபோது, தங்க நகைகள் மாயமானதோடு, கணக்கில் குளறுபடி இருந்தது தெரியவந்தது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தின் கணக்கில் அதிக தொகை பதிவு செய்து மோசடி நடைபெற்றது ஆய்வில் தெரியவந்தது.

பராமரிக்கப்பட்டு வந்த வாடிக்கையாளர்களின் 5081 கிராம் தங்க நகைகளில், 4650 கிராம் மட்டும் இருந்ததும், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1150 கிராம் தங்க நகைகள் மாயமானதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, வட்டார மேலாளர் தயானந்தன் அளித்த புகாரின் பேரில் கிளை மேலாளர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமி, நகை மதிப்பீட்டாளர் பாலக்காட்டைச் சேர்ந்த பிஜூ ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்தனர். மேலும், அதே கிளை நிறுவனத்தைச் சார்ந்த சுபா, விக்னேஷ் ஆகிய இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க