• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொழிலாளி உட்பட 2 பேர் தற்கொலை

January 24, 2022 தண்டோரா குழு

கோவையில் தொழிலாளி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் வசிப்பவர் காளிராஜன் (31). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. காளீஸ்வரி (28) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதனை நினைத்து காளிராஜன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட விரத்தியில் அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் நாகராஜ் (61). மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலாங்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உயிரை காப்பாற்றினர்.

இந்நிலையில், சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க