• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய கார் பந்தய போட்டி 2 நாட்கள் நடக்கிறது

September 17, 2022 தண்டோரா குழு

கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரிமோட்டார் ஸ்பீடுவேயில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கார்பந்தய போட்டிகள் நடைபெற உள்ளது.

ஜே.கே. டயர் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு இந்த தேசிய சாம்பியன் போட்டிகள் துவங்கப்பட்டது. இதன் 25-ம் ஆண்டு போட்டிகள் மேற்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. இதில் எல்.பி.ஜி. பார்முலா 4, ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்டு காண்டினென்டல் ஜி.டி. கோப்பை, எண்டூரன்ஸ் லீக் கோப்பை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடக்கிறது.

எல்.பி.ஜி. பார்முலா பந்தயத்தில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் நடப்பு சாம்பியனான தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் கலந்து கொள்ள வில்லை. இதனைத்தொடர்ந்து நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க