• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கு

March 3, 2018 தண்டோரா குழு

கோவை PPG தொழில் நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கு இன்று(மார்ச் 3)நடைபெற்றது.

கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கு நடைபெற்றது.கருத்தரங்கை கல்லூரி தலைவர் தங்கவேலு துவக்கி வைத்தார்.இந்த கருத்தரங்கில் 150 க்கும் மேற்பட்ட பொறியியற்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள், தொழில்நுட்ப வினாடிவினா, Mr . மெக்கானிக்,  தொழில்நுட்ப குறும்படம், water rocketry ,இன்ஜின் பிரித்தல் மற்றும் சேர்த்தல் மற்றும் தொலைவியக்கி கார் பந்தயம் ஆகிய துறைகள் குறித்த போட்டிகள் நடைபெற்றன.

மேலும்,இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பொறியாளர். திரு. S . முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி, லட்சுமி ஆகியோர்  பங்கேற்று மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  மொத்த  பரிசுத் தொகையாக  ரூபாய் ஐம்பதாயிரம் மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன .

மேலும் படிக்க