• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துவங்கிய பிரமாண்ட உணவு – 150 உணவகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள்

January 11, 2020

கோயம்புத்துார் விழாவின் ஒரு பகுதியாக, கோவை கொடிசியா திறந்த வெளி மைதானத்தில் மாபெரும் உணவு திருவிழாவினை, கோவை ஓட்டல்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

உணவு திருவிழா, டேஸ்ட்ஆப் கோயமுத்தூர் 2020 ஜனவரி 10 முதல் ஜனவரி 12ம் தேதி வரை மூன்று நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கிறது. கோவையின் வெற்றிகரமான மாபெரும் உணவு தயாரிப்பாளர்கள், அறுசுவை உணவு தருவோர் அணி திரண்டு ஒரே இடத்தில் கூடி மக்களுக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை தரும் திருவிழாவை அளிக்கின்றனர்.

கோவை மண்ணுக்கே உரித்தான மண் மணமிக்க சுவை மட்டுமின்றி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

கண்கவர் நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதோடு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சாம்பார் இட்லி, அனைத்து வகையான சைவ மற்றும் அசைவ தோசை வகைகள், மட்டன் சுக்கா, மீன் உணவு வகைகள் மற்றும் பிசா முதல் பிரியாணி வரை, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்றவைகளும் சுவைக்கலாம்.

மூன்று நாள் மெகா உணவு திருவிழா 150க்கும் அதிகமான உணவகங்கள் 3000 அதிகமான உணவுவகைகள் பொழுதுபோக்கு திருவிழா இதில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க