• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

December 23, 2020 தண்டோரா குழு

கோவையில் தி.மு.க.சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சாய்பாபாகாலனி பகுதி கழகம் சார்பாக 46 வது வார்டு காமராஜபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பகுதி செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் கலந்து கொண்டார். இதில்,ஆளும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே எடுத்து கூறப்பட்டது. தமிழக அரசின் தோல்விகள் குறித்தும் அ.தி. மு.க.வை.நிராகரிக்கிறோம் எனும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வார்டு செயலாளர் பாபு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆனந்தகுமார் நந்தகுமார் ஆறுமுகன் கிருஷ்ணராஜ் பிரபு பகுதி துணை அமைப்பாளர் கண்ணன் தொழில்நுட்ப பிரிவு வினோத் இளைஞரணி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்று துவங்கி 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராமசபை கூட்டங்கள் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க