• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு

May 19, 2020 தண்டோரா குழு

கோவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில், ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை கடந்த 13ம் தேதி தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிக்கள் வழங்கினர்.

மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்த பின்னர் திமுக எம்பிக்களான தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், எம்பிக்களான தங்களை மூன்றாம் தர மக்கள் போல நடத்தியதாகவும் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று சர்ச்சைக்குரிய வகையில் தயாநிதி மாறன் பேசினார்.
இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் பேச்சு, பட்டியல் சமூக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது கோவை வரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ஜெகநாதன் என்பவர் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க