• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவினர் இருவர் மீது வழக்கு பதிவு

March 31, 2021 தண்டோரா குழு

வாக்களர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக அதிமுகவினர் மஞ்சள் நிற டோக்கன் கொடுப்பதாக திமுகவினர் புகார் – திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவினர் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நியூ சித்தாபுதூர் பகுதியில் அதிமுகவினர் வீடுவீடாக பூத் சிலிப் அடிப்படையில் மஞ்சள் நிற டோக்கன்கள் வினியோகம் செய்து வருவதை திமுகவினர் பிடித்தனர். பின்னர் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மஞ்சள் நிற டோக்கன்களை பறிமுதல் செய்து தடுத்துள்ளனர். அதிகாரிகள் பூத் சிலிப் கொடுப்பது தவறு எனவும் இதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி எடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர் திமுகவின் 53 வது வட்ட செயலாளர் சசிகுமார் காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவை சேர்ந்த சந்தானம் மற்றும் சிவானந்தம் ஆகிய இரு நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி பணப்பட்டுவாடா நடைபெறமால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிங்காநல்லூர் திமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க