கோவை சாய்பாபாகாலனி பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை தினமும் வழங்கி அசத்தி வரும் தி.மு.க.வினர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.குறிப்பாக நோய் பரவலை தடுக்க விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு கழக தொண்டர்கள்,மாவட்டந்தோறும் ஒண்றிணைவோம் வா என ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இந்நிலையில் சாய்பாபா காலனியில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தி.மு.க.வினர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த்,மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ் ஆகியோர் தலைமையில் ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்,சமூக விலகலை கடைபிடித்து, தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை காவல்துறை மத்தியம் குற்றபிரிவு உதவி ஆணையர் பெரியசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.தொடர்ந்து என்.எஸ்.ஆர்.சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !