• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தள்ளுவண்டி வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

April 16, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளை அகற்ற மாநகராட்சியினர் முயற்சிப்பதாக கூறி தள்ளுவண்டி கடை வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளலூர் பகுதியில் குடிசை மாற்றும் வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் உள்ளது.இந்த வீடுகளுக்கு அருகேயே மாநகராட்சி சார்பில் கடைகள் சில கட்டப்பட்டு இருந்தது.அதற்கான டெண்டர் முன்னறிவிப்பு ஏதுமின்றி முடிவுற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு கட்டப்பட்ட கடைகளில் விரைவில் வியாபாரம் துவங்க உள்ள காரணமாக,அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளை இனி நடத்தக்கூடாது என மாநகராட்சியினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பல தள்ளுவண்டி வியாபாரிகள் பாதிக்கபடுவதாக கூறி அப்பகுதி வியாபாரிகள் இன்று மாநகராட்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.தங்களுக்கும் மாநகராட்சியினர் கடைகளை கட்டித் தரவேண்டும் என்றும் அரசியல் லாபத்திற்காக சிலர் கடைகளை டெண்டர் விட்டு உள்ளதாகவும் எனவே தங்களுக்கே அனைத்து கடைகளையும் வியாபாரம் செய்ய வழங்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.தள்ளுவண்டி கடைகள் அமைக்கவிடாமல் தடுத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க