• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

January 23, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு பேருந்து கட்டணங்களை 70 சதவீதம் உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  இதன் ஓரு பகுதியாக கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்  மாட்டு வண்டியில்  ஊர்வலமாக  மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்து மனு அளித்தனர்.

ஆடீஸ் வீதியில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  இருந்து 4 மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்த அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா,மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது இந்த கட்டண உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்து இருப்பதாகவும் தமிழக அரசு இந்த கட்டண உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும்,இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க