• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு

April 14, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

அதேபோல கோவையை அடுத்த பேரூர் பகுதியிலுள்ள பிரசித்திப்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் இன்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அதிகாலையில் இருந்தே மாசணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.இதனையடுத்து முற்றிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளைகொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அம்மனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க