• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு

April 14, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

அதேபோல கோவையை அடுத்த பேரூர் பகுதியிலுள்ள பிரசித்திப்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் இன்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அதிகாலையில் இருந்தே மாசணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.இதனையடுத்து முற்றிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளைகொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அம்மனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க