• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு #8

November 27, 2017

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு

மத்திய அரசின் கீழ் செயல்படும் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தை மூடுவதாக தகவல் வெளியாகி உள்ளதால் , அதனை மூடக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புகளுடன் வந்து நூதன முறையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மத்திய அரசு மூட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 105 ஆண்டுகள் பழமையான கரும்பு இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோவையில் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான புதிய புதிய கரும்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அறிய வகை கரும்புகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். எனவே இதனை மூடினால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதால் அதனை மூடும் நோக்கத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக கரும்புகளுடன் வந்த விவசாயிகள் ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

மேலும் படிக்க