• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

September 30, 2021 தண்டோரா குழு

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தியும், கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் எனவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை கோவையில் நிறுவ வலியுறுத்தியும்,தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம்,மூவேந்தர் மக்கள் பொது நலச்சங்கம் உள்ளிட்டோர் மத்திய மாநில அரசை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தின் மாநில தலைவர் கண்ணன்,பொருளாளர் முரளிக்குமார்,மூவேந்தர் மக்கள் பொதுநல சங்க தலைவர் எழில் பாண்டியன்,நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்கம் மாநில தலைவர் ஜெயக்குமார்,செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க