• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தன்னுயிர் நீத்த காவலர்கள் மூன்று பேருக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம்

October 21, 2019 தண்டோரா குழு

கோவையில் பொதுமக்கள் உயிர் காக்க தன்னுயிர் நீத்த காவலர்கள் மூன்று பேருக்கு 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆண்டு தோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவலர்களை நினைவு கூற வகையில் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், 1985 ஆம் ஆண்டு கொள்ளை குற்றவாளியை பிடிக்கும் போது உயிரிழந்த காவலர் ராஜரத்தினம், 1997 ஆம் ஆண்டு பலி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்ட தலைமை காவலர் செல்வராஜ், மற்றும் 2011 ஆம் ஆண்டு விபத்து ஏற்படுத்தியவரை பிடிக்க முற்பட்டபோது உயிரிழந்த தலைமை காவல் சந்திரசேகரன் ஆகிய மூன்று பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரன் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இவரை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதில் மக்களுக்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க