• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தன்னார்வலருடன் தொடர்பில் இருந்த 32 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை

April 16, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னார்வலருடன் தொடர்பில் இருந்த 72 பேரில், 32 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது முதற்கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், தொப்பம்பட்டியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் டெல்லி சென்று திரும்பிய நிலையில், தன்னை தனிமைபடுத்தி கொள்ளாமல், வீட்டில் உணவு சமைத்து ஆதரவற்றோர், மருத்துவர்கள், காவலர்கள் என பலருக்கும் விநியோகம் செய்துள்ளார். இதனிடையே, அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது.

இதனையடுத்து,அவர் வசித்த கோத்தாரி நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்த 72 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,முதற்கட்டமாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 40 மாதிரிகளின் முடிவுகள் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க