• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

October 15, 2021 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரத்திற்கும், பின்னர் அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.

அப்போது பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் நைசாக கவுரி மனோகரி மணிபர்சை திருடி சென்றுள்ளனர். அதில் 2 பவுன் தங்க நகை, ரூ.2 ஆயிரம், ஏடிஎம் மற்றும் லைசென்ஸ் உள்ளிட்டரை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுரி மனோகரி இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க