• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

September 17, 2021 தண்டோரா குழு

கோவையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.பெரியாரின் சிலைகள் உள்ள அனைத்து இடங்களிலும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று காலை முதல் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இங்கு வரும் பலரும் பெரியாரின் சிந்தனைகள் வாழ வேண்டும் என்றும் பெரியாரின் புகழ் ஓங்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். பலரும் அவரது சிலையின் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், திமுக நிர்வாகிகள் நா.கார்த்திக், பொங்கலூர் பழனிசாமி,மற்றும் திமுக வழக்கறிஞர் தண்டபாணி,கணேஷ்குமார், சிங்கை ரவிச்சந்திரன், மனோகரன், சேரலாதன், ஜெயமணி,முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், முருகவேல், பகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சுதாகர், சந்தோஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேசமயம் தமிழக அரசு பெரியாரின் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க