• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 17, 2019

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் புகையிலை, பான், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டு கடைகளில் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில் கோவையில் இன்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சூலூர் பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்களும், சிங்காநல்லூர் பகுதியில் 20 கிலோ புகையிலை பொருட்களும், கவுண்டம்பாளையம் பகுதியில் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.

மேலும் படிக்க