• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைப்பு

October 25, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வீடுகள், கம்பெனிகளில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசுக்களினால் பரவுகிறது. இதனால், ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியை கண்டறிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் சுகாதாரத்துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 12 வட்டாரங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு குழுவில் சுகாதாரத்துறை அலுவலர், ஆய்வாளர் என உள்ளனர். இவர்கள், வீடுகள், கம்பெனிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க