• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டிரெடிங் நிறுவனம் நடத்தி மோசடி செய்த நபர் கைது

January 8, 2020 தண்டோரா குழு

கோவையில் டிரெடிங் நிறுவனம் நடத்தி முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பல இலட்ச ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் ஒஎல்எக்ஸ் லிப்ரா இண்டர்நேசனல் டிரெடிங் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி ஏராளமானோர் பல இலட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் உறுதியளித்தபடி பணத்தை திருப்பிதராமல் அந்நிறுவனத்தினர் இழுத்தடித்துள்ளனர்.

இதுதொடர்பாக போத்தனூர் பகுதியை சேர்ந்த தில்லைக்கரசன் என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நிறுவன உரிமையாளர் போனி தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த போனி தாமசை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க