• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

June 12, 2018 தண்டோரா குழு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படி 8 மணி நேர வேலை,நிரந்திர பணி உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் மதுபான சில்லறை கடைகளில் 15 ஆண்டுகளாக 27 ஆயிரம் ஊழியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு அரசு எந்தவித அடிப்படை உரிமைகளையும் வழங்காமல் நவீன கொத்தடிமை போல் நடத்துவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கவும்,வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை செய்ய வலியுறுத்தினர்.

மேலும்,கடை ஊழியர்களை தாக்கி விற்பனை பணத்தை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.அனைத்து கடை ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும்,உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க