• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

June 12, 2018 தண்டோரா குழு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படி 8 மணி நேர வேலை,நிரந்திர பணி உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் மதுபான சில்லறை கடைகளில் 15 ஆண்டுகளாக 27 ஆயிரம் ஊழியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு அரசு எந்தவித அடிப்படை உரிமைகளையும் வழங்காமல் நவீன கொத்தடிமை போல் நடத்துவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கவும்,வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை செய்ய வலியுறுத்தினர்.

மேலும்,கடை ஊழியர்களை தாக்கி விற்பனை பணத்தை கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.அனைத்து கடை ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும்,உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க