• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜான்சி ராணி வேடமிட்டு பெண்கள் 2 சக்கர பேரணி

November 3, 2020 தண்டோரா குழு

பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6 ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டு தலங்கள் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை கணுவாயில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜான்சி ராணி வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் 2 சக்கர பேரணி சென்றனர்

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை வரும் 6ம் தேதி தொடங்வுள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதத்தில் மாநில இளைஞரணி செயலாளர் பீர்த்தி லட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சி ராணி வேடமிட்டு 2 சக்கர வாகனத்தில் ஊர்வலமாக மருதமலை வரை செல்லும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வக்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக தொடர்ந்து கட்சி கொடி ஏற்றப்பட்டு கோஷங்கள் போடப்பட்டன. தொடர்ந்து அருகில் உள்ள முருகன் கோவிலில் பூஜை செய்து இந்த பேரணி தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் திருநாவக்கரசு, கணேஷ், மாவட்ட மகளீர் அணி செயலாளர் மஹாலட்சுமி, கண்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க