• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜமாத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக புகார்

March 30, 2022 தண்டோரா குழு

கோவையில் ஜமாத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக இந்து முன்னணியினர் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 1ம் தேதி அனைத்து ஜமாத் இணைந்து கோவையில் போராட்டம் நடத்தி அதன் வாயிலாக கலவரம் நடத்த முயற்சி நடைபெறுகிறது. அதற்காக பொறுப்பு காவல் ஆணையராக உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம். கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

காஸ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளை முற்றுகையிட முயற்சித்து செய்கின்றனர்.அதனால் தான் காவல்துறை அதிகாரிக்ளிடம் மனு அளித்துள்ளோம். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் குரானை கொடுக்கின்றனர்.இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.இத்தகைய நபர்களை உளவுத்துறையை வைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க