• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜனவரி 3 ந்தேதி பி.எஸ்.ஜி.குழுமங்கள் சார்பில் மாபெரும் இசை கச்சேரி விழா

December 28, 2019

கோவை விழாவின் ஒரு பகுதியாக பி.எஸ்.ஜி.,மருத்துவ கல்லுாரியில் காதம்பரி,எனும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன்,
பி.எஸ்.ஜி.பள்ளியின் செயலர் நந்த கோபாலன்,பப்ளிக் பள்ளியின் நிர்வாகி கிரீஷ் ,மருந்தியல் துறையின் தலைவர் புவனேஸ்வரி மற்றும் பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் இசைத்துறை தலைவர் விஜய ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள் சார்பாக ,தொடர்ந்து காதம்பரி இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் வரை கலந்து கொண்டு நடனம்,கர்நாடகா சங்கீதம் மற்றும் திரை இசை பாடல்களை பாட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் விழாவில் ஸ்ரீமதி கருணா சாகரியின் பரதநாட்டியம்,பிரபல நித்ய ஸ்ரீ மகாதேவனின் இசை கச்சேரி,ராஜேஷ் வைத்யா குழுவினரின் பாரம்பரிய இசையை சினிமா பாடல்களுடன் கலந்து பாடும் கச்சேரி என இசை தொடர்பான அனைத்து பாரம்பரிய கலைகளும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க