• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சைலன்ஸர்களை மாற்றியமைத்து அதிக சத்தத்துடன் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய கோரிக்கை

March 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சைலன்ஸர்களை மாற்றியமைத்து அதிக சத்தத்துடன் வேகமாக சாலையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் இதர வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சமும் இடையூறும் ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்று சாலையில் அதிக சத்தத்துடன் ஓட்டிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறுகையில்,

‘‘ அவினாசி சாலை ஜென்னி கிளப் முதல் கொடிசியா வரை காலை முதல் மாலை மற்றும் இரவு வேலைகளில் கல்லூரி மாணவர்கள் அதிவேக பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்குள்ள பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சைலன்ஸர்களை மாற்றியமைத்து அதிக சத்தத்துடன் வேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க