• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணால் பரபரப்பு

February 23, 2021 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வாடைக்கு குடியிருப்பவர் விஜயா. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.பூமார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அட்வான்ஸ் தொகையும் கழிந்த நிலையில் கட்டிட உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி பலமுறை கூறிய நிலையில் வீட்டின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு குடியிருக்க அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். உடனடியாக செல்போன் டவர் அமைந்துள்ள கட்டிடத்தில் இருப்பவர்கள் விஜயாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் செவி சாய்க்கவில்லை. காவல்துறையினரும் கட்டிட உரிமையாளருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி காவல் துறையினர் அங்கிருந்து போகும்படி சத்தமிட்டார்.

இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் லாவகரமாக விஜயாவை பிடித்து கீழே இறக்கினர். அதனைத் தொடர்ந்து விசாரணைக்காக விஜயா அழைத்துச் செல்லப்பட்டார். செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க