• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செல்போனை பறித்து சென்ற நபரை துரத்தி பிடித்து கைது செய்த காவல் துறை

March 12, 2018 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்ற நிலையில் அவரை காவல் துறையினர் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிரண் என்பவர் நடந்து சென்ற போது, வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென அவர் வைத்து இருந்த செல்போனை பறித்து சென்று ஓடினார். அப்போது அவரை பின் தொடர்ந்து கிரணும் ஓடினார். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை துரத்தி சென்று பிடித்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் கைது செய்யப்பட நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பதும், ஏற்கனவே கிரணுடன் ஒன்றாக வேலை செய்து வந்து உள்ளார். அப்போது  நேற்றே அவர்  கிரணிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் திருடி சென்ற வழக்கில் காவல் துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் வினோத் , அவரை பின் தொடர்ந்து வந்து அவர் வைத்து இருந்த செல்போனையும் பறித்து செல்வதற்காக வந்து உள்ளார். அப்போது அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து உள்ளனர்.

மேலும் படிக்க