• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை – மரங்கள் சாய்ந்தன

July 16, 2018 தண்டோரா குழு

கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் கடுமையான சூறாவளிக்காற்றால்,தேக்கு மரங்கள் அடியோடு சாய்ந்ததால் அதனை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்,கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கோவை குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தேக்கு மரங்கள்,புளிய மரங்கள் அடியோடு
சாய்ந்துள்ளது.இதனால் மரங்கள் ஒவ்வொன்றையும் அறுத்து அதனை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,அப்பகுதியில் இருந்த மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்ததால்,மின் கம்பங்களும் சாய்ந்தன.இதனால் மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க