• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சூன்யா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு விழா

July 12, 2018

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்,பாரதி பூங்காவில் சூன்யா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த பொதுமக்கள்,மாநகராட்சி பணியாளர்கள்,பணியாளர்கள்,தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன்.கே.அர்ச்சுணன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த 30 பொதுமக்கள்,மாநகராட்சி பணியாளர்கள் 12 பேருக்கும்,9 தன்னார்வ அமைப்புகளுக்கும்,பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,

“கோவை மாநகராட்சி தூய்மைப் பணியில் முன்னிலை மாநகரமாக விளங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சிறப்பாக செய்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியுடன் சூன்யா திட்டத்தின் கீழ் வார்டு எண்-22,24 வார்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள்,ICCEI
அலுவலர்கள்,RAAC,BOSCH,BPLA மற்றும் JNLA ஆகியோர்கள் இணைந்து தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்றாகும்.அதற்கேற்ப கோவை மாநகராட்சியில் இப்பகுதியில் மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை பொதுமக்களும்,மாநகராட்சி பணியாளர்களும்,தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் சிறப்பாக மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியதாகும்.மேலும்,இதுபோன்ற பணிகளை தொடர்ந்து அனைவரும் மேற்கொள்ள வேண்டும் அதற்காக மாநகராட்சி என்றும் துணையாக இருக்கும்”என்றுக் கூறினார்.

மேலும் படிக்க