• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுவர் ஏறி குதித்து திருட முயற்சிக்கும் நபர் – சிசிடிவி காட்சி வெளியீடு

January 17, 2020 தண்டோரா குழு

கோவையில் சுவர் ஏறி குதித்து வந்து திருட முயற்சிக்கும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்நபர் மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் 3 வீடுகளில் திருட முயற்சித்தாக தெரிகிறது.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வரும் நபர், சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல்களை எட்டி பார்ப்பது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க