• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மதிமுகவினர் போராட்டம்

April 26, 2018 தண்டோரா குழு

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கோவையில் மதிமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கனா 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க வலியுறுத்தி மதிமுக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீடு தகுந்த மாணவர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும்,இணைய வழி விண்ணப்பம் அளிக்கும் முறையை அரசே செய்வதை போல சேர்க்கையும் அரசே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.ஏற்கெனவே பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி முற்றுகையில் ஈடுபட்டு உள்ளனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க