• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுவன் பைக் ஒட்டியதால் தந்தை மீது வழக்குப்பதிவு

July 30, 2021 தண்டோரா குழு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 13 வயது சிறுவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் என்பதும், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவதும், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்ல வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின்பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிறுவனின் தந்தை நந்தகுமார் மீதும், சிறுவன் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இதுபோன்று சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதி கொடுக்கும் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க