• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுவன் பைக் ஒட்டியதால் தந்தை மீது வழக்குப்பதிவு

July 30, 2021 தண்டோரா குழு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 13 வயது சிறுவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் என்பதும், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவதும், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்ல வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின்பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிறுவனின் தந்தை நந்தகுமார் மீதும், சிறுவன் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இதுபோன்று சிறுவர்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதி கொடுக்கும் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க