• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுத்தை , செந்நாய் போன்று வேடமணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

June 11, 2018 தண்டோரா குழு

கோவையில் சிறுத்தை , செந்நாய் போன்று வேடமணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு
வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் சிறுத்தை , செந்நாய் போன்ற விலங்குகளை கணக்கெடுத்து அதனை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வன விலங்குகளை போல வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உளிட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து காட்டு விலங்குகளான யானை, சிறுத்தை போன்றவைகள் அதிகமாக விவசாய பயிர்கள் மற்றும் ஆடு மாடுகள் மற்றும் விவசாயிகளை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கபட்டு உள்ளதால் இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் வன விலங்குகளின் வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அப்போது, வனத்துறையில் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால் வன விலங்குகள் வரும் பொழுது அவர்கள் வருவதற்கு வெகு நேரம் ஆவதாகவும் என வனத்துரையில் ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இதற்கென தனிக்குழு அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க